More than a Blog Aggregator

Sep 7, 2011


"பூதங்களும் எனது குழந்தைகளும்”












Sep 1, 2011


முருகா உனக்கே தூக்கா?
















முருகா! உன் பெயருடைய தமிழனுக்கு
முடிச்சுப்போட பார்க்கிறார்கள் தொண்டையிலே!
ஆறுபடை வீடுடைய உந்தன் தேசத்திலே - இந்த
அநியாயம் நடந்திடுமா நம் கண்முன்னாலே.

காந்தியை காசுகளில் அடித்து வைத்தோம்.-அதை
கவனமாக பேசுகளில் எடுத்து வைத்தோம்.
காந்திவழி காதவழி கூட இல்லை - அது
காலாவதி ஆயிற்றென்றால் பொய்யுமில்லை.

அமைதி காக்கப் போனபடை அங்கு
அநீதி செய்தது. அசிங்கங்களும் கூடவது
அரங்கேற்றம் செய்தது. - ஆனாலும்
பிரதமரை கொன்றது குற்றம்.


அம்புகளோ கைகளிலே அகப்படவில்லை.
எய்தவரும் இறுதிவரை பிடிபடவில்லை.
அப்பாவித் தமிழர் மட்டும் அடியுதைபட்டார்.
ஆண்டுகள் இருபதுக்கு சிறையினில் செத்தார்.

இருபது வருடமென்ன ஒன்றா? இரண்டா?
இத்தனை நாள் தண்டனைகள் போதாதா என்ன?
இப்போது ஆணையிட்டீர் தூக்கில் போட-உம்
இதயமென்ன இரக்கமில்லா வெற்றுக்கூடா?


அன்னாக்கு டெல்லியிலே கிடைத்த வெற்றி-எங்கள்
அண்ணாவின் பிள்ளைகட்கும் கிடைக்க வேண்டும்.
இன்னாளில் நீதி இங்கு செத்துப் போயின் - இனி
என்னாளும் மனிதஇனம் உய்த்துப் போகா.

செங்கொடிகள் தயவுசெய்து வீழவேண்டாம். -நாளை
செங்கோல்கள் உங்களால் தான் வாழவேண்டும்.
ஆறுகோடி தமிழர் வாழும் தமிழகத்தில் - என்றும்
உயிர்க்கொடிகள் வீணாய் வாடிப் போகவேண்டாம்.


முற்றும்


* அன்னா ஹசாரே -
     ஜன் லோக்பால் மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருந்தவர்.
* செங்கொடி - முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்துச் செய்யவேண்டி
    தீக்குளித்து மாண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதேயான யுவதி.


”இயற்கையை தவிர வேறு யார் மரணத்தை ஏற்பாடு செய்தாலும் அது கொலை தான்.”



நன்றி - ஓவியர் (பொங்குதமிழ்)