More than a Blog Aggregator

Mar 9, 2014

மதிப்பிற்குரிய ஆண்களுக்கு



மதிப்பிற்குரிய ஆண்களுக்கு



நான் ஒரு பெண்ணென்பதால் ...

நீங்களெனக்கு

உதவி செய்யாதீர்கள்.
அன்பு காட்டாதீர்கள்.
விட்டுக் கொடுக்காதீர்கள்.
அனுதாபம் காட்டாதீர்கள்.
ஆதரவாய் இருக்காதீர்கள்.
கண்ணீர் துடைக்காதீர்கள்.
கடன் தராதீர்கள்.
பயணங்களில் துணைக்கு வராதீர்கள்.
பேரூந்துகளில் இடம் தராதீர்கள்.
துன்பங்களில் பங்கெடுக்காதீர்கள்.
விழுகிற போதும் கை கொடுக்காதீர்கள்.
எழுகிற போதும் கை தட்டாதீர்கள்.
முகப்புத்தகத்தில் நட்பாகாதீர்கள்.
என் எழுத்துக்களுக்கு விருப்பக் குறியிடாதீர்கள்.
தனிச்செய்திப் பெட்டிக்குள் புகழாதீர்கள்.

ஏனெனில்

நான் ஒரு பெண்ணென்பதால் ...

நீங்களென்னை சீரழித்தும் விடுவீர்கள்.

---xxx---

தீபிகா
07.11 Am.
08.03.2014




4 comments:

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய
யதார்த்த நிலை சொல்லிப்போகும்
அற்புதமானக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலைக்கு சரியான வரிகள்...

சர்வ தேச மகளிர் தின வாழ்த்துக்கள் - என்றும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவரது தளத்தில் http://gopu1949.blogspot.in/2015/07/33_3.html என்ற முகவரியில் உங்களது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது தளத்தினைக் கண்டேன். பாராட்டுக்கள்.
http://www.ponnibuddha.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

Post a Comment