இசைமுகம்
வறுமையின் இசைக்கு
ஒரு
சோகத்தின் முகம் உண்டு.
மிதந்து மிதந்து
அது
எல்லோரது இதயங்களையும்
தொட்டுப் பார்க்கிறது.
சிலர்,
நின்று திரும்பிப் பார்க்கின்றனர்.
மிகச் சிலரை,
இசை இழுத்துக் கொண்டு வருகிறது.
பலர்,
அதை தாங்க முடியாமல்
விரைந்து கடக்கிறார்கள்.
யாசிக்கிற இசையின் கரங்கள்
காற்றின் முகத்தில்
அவமானத்தின் காயத்தை பரப்புகிறது.
எப்போதாவது சிலர்,
குறைந்த சில்லறைகளால்,
அந்த இசையை அங்கீகரிக்கிறார்கள்.
பசியுடன் அலையும்
வறுமையின் சுருதியில்
எந்தச் சலனமுமையில்லை.
அது,
ஒரு உயர்ந்த கலையின் உச்சியில்,
அசைவற்ற தியானத்திலிருக்கிறது.
- தீபிகா-
15.11.2025
03.12 am.
Tks - artwork
#தீபிகா
#இசைமுகம்
#theepika
#ஈழம்
#பசி #தியானம்

No comments:
Post a Comment