ஒரு மகன்
என்னைப் போல.
ஒரு தாய்
என் அம்மாவைப் போல.
ஒரு தந்தை
என் அப்பாவைப் போல.
ஒரு வீடு
என் வீட்டைப் போல.
ஒரு பெரும் வலி
நிச்சயம்
அது என்னுடையதேயல்ல.
நானதை,
உணர்ந்து பார்க்க முனைகிறேன்.
அது
தூரத்து நட்சத்திரமாகத் துடிக்கிறது.
- தீபிகா-
15.11.2025
10.50 am.

No comments:
Post a Comment