சொறிதேய்ப்பு
ஒரு குக்குரன்
நியாயம் பிளந்ததும்,
ஓடி வருகின்றன ஒன்பதும்.
தங்களை அசைத்துக் காட்ட,
ஒரு மணிக்காற்றுக் கிடைத்த
சின்ன மகிழ்ச்சி நாவில்.
வெறுவெற்றிலை குதப்பும்
பொழுது களிப்பிகளுக்கு,
ஒரு நோவுமில்லா
சொறிதேய்ப்புக் களியிது.
கொஞ்சப் பூரணமுமற்ற
விரல் வீங்கிய வாந்திகளுக்கு
குடை பிடிக்கின்றன காளான்கள்.
பணத்திற்குத் தடுமாறும்
பெருந்தலைகள் நான்கு
அமுசடக்கிக் குனிகின்றன.
கேட்பாரற்ற வெளியில்
அழுகிறது ஓநாய்.
அதன்,
கண்களில் மிச்சமிருக்கிறது
களவாடிய ஆடுகள் மீதெழும்
மீச்சிறு குற்றவுணர்வு.
----- xxx -----
தீபிகா
02.11.2025
08.43 am.
Tks - photo
#சொறிதேய்ப்பு
#தீபிகா
#theepika
#கவிதை
#ஈழம்

No comments:
Post a Comment